மகளிர் உரிமைத்தொகை கோரி விரைவில் புதியவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்றைய சட்டப்பேரவை நிகழ்வில் தெரிவித்தார். கடந்த 19 மாதங்களில் ரூ.21,000 கோடி உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது என அவர் கூறினார். மேலும், 1.15 கோடி பேருக்கு தற்போதுவரை உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். மேலும் விரைவில் அணைத்து மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கும் அடையாள அட்டை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.