ரெட் அலர்ட் தொடர்கிறது - வானிலை ஆய்வு மையம்

1541பார்த்தது
ரெட் அலர்ட் தொடர்கிறது - வானிலை ஆய்வு மையம்
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ரெட் அலர்ட் தொடர்வதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 39 இடங்களில் அதி கனமழையும், 33 இடங்களில் மிக கனமழையும், 12 இடங்களில் கனமழையும் பெய்துள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும் இது தொடர வாய்ப்புள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும் விருதுநகர் மற்றும் தேனிக்கு மிக கனமழை வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார். மேலும் நாளைய தினமும் தென் மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி