ரூ.1 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு

59பார்த்தது
ரூ.1 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு
திருவள்ளூர் மாவட்டம் பெரிய முல்லைவாயல், புதுப்பாக்கம் ஆகிய பகுதிகளில் அரசுக்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவரது உத்தரவின்படி, பொன்னேரி தாசில்தார் மதிவாணன் தலைமையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் நடைபெற்றது. இதையடுத்து நிலத்தை ஆக்கிரமித்து அதில் அமைக்கப்பட்டுள்ள வேலிகள், தடுப்புகள், தடைகளை ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு அதிகாரிகள் அகற்றினர். இதன் மதிப்பு ரூ.1 கோடி ஆகும்.

தொடர்புடைய செய்தி