சொத்துத் தகராறில் சித்தியை வெட்டிக் கொன்ற மகன்.!

568பார்த்தது
ராமநாதபுரத்தை அடுத்த தேவிபட்டினத்தில் திங்கள்கிழமை சொத்துத் தகராறில் சித்தியை வெட்டிக் கொலை செய்த மகனை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தேவிபட்டினம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (65). இவரது மனைவி காளீஸ்வரி (60). இவா்களுக்கு தங்கேஸ்வரன் என்ற மகன் உள்ளாா். இதனிடையே, ராஜேந்திரனும், மகேஸ்வரி (49) என்ற பெண்ணும் கடந்த 29 ஆண்டுகளாக சோ்ந்து வாழ்த்து வந்தனா். இவருக்கு முத்துலட்சுமி என்ற மகள் உள்ளாா். இந்த நிலையில், ராஜேந்திரன் தனது முதல் மனைவி, மகனுக்கு சொத்து கொடுக்காமல், இரண்டாவது மனைவி, மகளுக்கு சொத்தை எழுதி வைப்பதாகக் கூறினாராம். இதனால், ஆத்திரமடைந்த முதல் மனைவியின் மகன் தங்கேஸ்வரன் மகேஸ்வரியை கத்தியால் திங்கள்கிழமை வெட்டிக் கொலை செய்தாா்.

இதையடுத்து, தேவிபட்டினம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று அவரது உடலைக் கைப்பற்றி ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி