போதையில் தகராறு நண்பரை கொலை செய்தவர் கைது..!

4455பார்த்தது
போதையில் தகராறு நண்பரை கொலை செய்தவர் கைது..!
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பண்ணவயலில் அரசு மதுபான கடை உள்ளது. இந்த மதுபான கடையில் ஆதியூர் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரம் மகன் கண்ணன் (37) பாரதி நகரை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் சுரேஷ்குமார் (47) இருவரும் மது அருந்திவிட்டு இருந்தபோது இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு கைகழுப்பில் முடிந்துள்ளது.

அப்போது சுரேஷ்குமாரை கீழே தள்ளி கண்ணன் சுரேஷ்குமாரின் கழுத்தில் மிதித்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த சுரேஷ்குமார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த நிலையில் சுரேஷ்குமார் மனைவி தமிழரசி கொடுத்த புகாரில் கண்ணனை திருவாடானை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மூன்று நாட்களாக சிகிச்சையில் இருந்த சுரேஷ்குமார் நேற்று இரவு சிகிச்சை பலனளிக்காமல் இறந்து போனார். இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி திருவாடனை காவல் நிலையத்தார் விசாரித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி