பாஜக சார்பில் பொது மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடந்தது.

74பார்த்தது
திருவாடானையில் தேசிய கல்வி கொள்கை ஆதரித்து மாவட்ட தலைவர் தலைமையில் பொது மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடந்தது.
திருவாடானை நகரில், புதிய தேசிய கல்வி கொள்கையை ஆதரித்து, பாஜக மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமையில் பொது மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமையில் நடைபெற்ற இந்த இயக்கத்தில்,   பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.   புதிய கல்வி கொள்கை, மாணவர்களின் எதிர்காலத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு சீர்திருத்தங்களை உள்ளடக்கியுள்ளதாகவும், இதற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும்  மாவட்ட தலைவர்  கேட்டுக்கொண்டார். உடன் வழக்கறிஞர்கள் சௌந்தரபான்டியன், சண்முகநாதன், ரமேஷ் மற்றும் பாஜக நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி