விவசாயிகள் நலத்திற்காக மத்திய, மாநில அரசுகள், நலத்திட்டங்களை கொண்டுவந்துள்ளது. அனைத்து திட்டங்களின் பலன்களையும் விவசாயிகள் பெறுவதற்கு, ஆதார் எண் போன்று தனித்துவமான தேசிய அளவிலான அடையாள எண் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், “உழவர் நலத்துறை அலுவலர்களால் நடத்தப்படும் சிறப்பு முகாம்களில் மார்ச் 31ஆம் தேதிக்குள் கலந்து கொண்டு, தங்களுக்கான அடையாள எண்ணைப் பெற்றுக்கொள்ளலாம்” என தஞ்சை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் வித்யா தெரிவித்துள்ளார்.