தமிழ்நாட்டில் இன்று (மார்ச்.06) அதிகபட்சமாக 7 மாவட்டங்களில் 100°F-க்கு மேல் வெயில் பதிவாகியுள்ளது. ஈரோட்டில் 103°F, கரூரில் 102°F, மதுரையில் 101°F, திருப்பத்தூரில் 101°F, வேலூர் 101°F, சேலத்தில் 100°F, திருச்சியில் 100°F வெயில் பதிவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. மேலும், தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.