மகளிருக்கு 1000 ரூபாய் வங்கிக்கணக்கில் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதியை ஒட்டி வரவு வைக்கப்படும். இந்நிலையில், இந்த மாதம் சற்று முன்னதாகவே மகளிர் உரிமைத்தொகை வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மார்ச் 8ஆம் தேதியை ஒட்டி மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.