பிரதமர் நரேந்திர மோடி மதம் மற்றும் கடவுள் வழிபாட்டுத்தலங்கள் ஆகியவற்றின் பெயரால் வாக்கு சேகரிக்கிறார் அவரை ஆறு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மனு விசாரணைக்கு உகந்தது அல்ல எனக்கூறி டெல்லி உயர்நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.