பரமக்குடி விவசாயி பாஸ்கரன் இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டரிடம் கூறுகையில் கடந்த மாதம் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் மான்கள், காட்டு பன்றிகளால் தனது விவசாயம் பாதிக்கப்பட்டதாகவும் அதற்கு உரிய இழப்பீடு வழங்க கோரி மனு கொடுத்தேன். அதற்கு உரிய விளக்கத்தை வனத்துறை தெரிவிக்காமல் பணி செய்ய விடாமல் தடுத்ததாக பொய் வழக்கு பதிவு செய்துள்ளது. இதனால் என் உயிருக்கு ஆபத்து உள்ளது என்றார்