அரசாணையை பின்பற்றி 24 மணி நேரமும் டீக்கடை நடத்தலாம் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. இரவு 11 மணிக்குள் கடையை மூட போலீசார் கட்டாயப்படுத்துவது ஏற்புடையதல்ல என கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையைச் சேர்ந்த பஷீர் என்பவர் வழக்க தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இக்கருத்தை தெரிவித்துள்ளது.