முத்துவயல் கிராமத்தில் சமத்துவ இஃப்தார் நிகழ்ச்சி

1085பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே முத்துவயல் கிராம அல் மஸ்ஜிதுர் ரஹ்மான் ஜூம்மா பள்ளியின் வளாகத்தில் ஜமாஅத் தலைவர் அஜ்மல் கான் தலைமையில் சுலைமான் , ஆமீர் கான் , பிலால் பீர் முகம்மது , ஹபீப் ரகுமான் , சீதக்காதி , முகம்மது அமின் , அப்துல் மாலிக் , அப்துல்லா ஆகியோர் முன்னிலையில் சமத்துவ இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் அனைவரும் சமத்துவத்தோடு எந்தவித பாகுபாடு இன்றி வாழ வேண்டும் என்று பேசப்பட்டது. அப்ஸலுல் உலமா, மௌலானா மௌலவி முஹம்மது அனீஸ் முனீரி, பாஜில் ஸஹாரன்பூரி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் , நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சந்திர பிரபா ஜெயபாலன் , போகலூர் ஒன்றிய கழக செயலாளர் வழக்கறிஞர் கதிரவன் , முனிஸ்வரன் , முத்துவயல் ஊராட்சி மன்றத் தலைவர் ரவி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சபரிவேனி சரவணன் , நாம்தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் காமராஜ் செல்லத்துரை , தமிழ் புலிகள் கட்சி மேற்கு மாவட்ட செயலாளர் ராஜா , CBI (M) மாவட்ட செயல் குழு உறுப்பினர் ராஜ்குமார் , தேருவேலி ஓய்வு பெற்ற ஆசிரியர் முஸ்தபா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
முத்துவயல் மற்றும் பொட்டகவயல் முஸ்ஸீம் ஜமாத்தார்கள் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி