முதுகுளத்தூர் அருகே வடமாடு மஞ்சுவிரட்டு.!

83பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகேயுள்ள எஸ். ஆர். என். பழங்குளத்தில் வேம்பார் உடைய அய்யனார், வாழவந்தாள் அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலின் பொங்கல் விழா, பூத்தட்டு திருவிழாவையொட்டி,
வீரத்தமிழர் வடமாடு பேரவை சார்பாக மூன்றறாம் ஆண்டு வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி நடைபெற்றறது.

இதில் மதுரை, திருநெல்வேலி, விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 17 காளைகள் கலந்து கொண்டன. மாடுபிடி வீரர்கள் 100 க்கும் மேற்பட்டோர் பல்வேறு குழுக்களாக பிரிக்கப்பட்டனர்.

இதில் மைதானத்தில் வடம் பூட்டப்பட்டு ஒவ்வோர் காளையாக களம் இறறக்கப்பட்டது. 9 வீரர்கள் கொண்ட குழுவினர் களம் இறறங்கினர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பணம், அண்டா ஆகியவை பரிசாக வழங்கப்பட்டன. இந்தப் போட்டியை எஸ். ஆர். என். பழங்குளம், முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

தொடர்புடைய செய்தி