தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மழை

81பார்த்தது
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மழை
தமிழ்நாட்டில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று (செப்.11) அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கோவை, தென்காசி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழையும், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி