ராஜஸ்தானில் முதல்வர் சுகாதாரத்துறை நலத்திட்டங்களை இன்று தொடங்கி வைத்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது,"பாஜக சாதி, இனம் மற்றும் மதங்களின் பெயர்களை வைத்து தேர்தல் ஆதாயம் தேடுவதை மக்கள் நன்கு புரிந்து வருகிறார்கள். பாஜகவினர் இது போன்ற மோசடி விளையாட்டுகள் மூலம் வெற்றி பெற்று வருகிறார்கள். மக்களிடம் பயத்தையும் கோபத்தையும் விதைத்து ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிட வைக்கிறார்கள். ஜெய் சியாராம் என ஏன் கூறுவதில்லை. சீதா தேவியை கூட ராமரிடம் இருந்து பிரித்து விட்டார்கள்" என தெரிவித்தார்.