கடைக்குள் புகுந்து கல்லா பெட்டியிலிருந்த பணம் அபேஸ் (Video)

81பார்த்தது
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலில் செல்போன் கடை வைத்திருக்கும் நபர் ஒருவர் நேற்று (அக். 22) கடையை திறந்து வைத்துவிட்டு அருகில் உள்ள உணவகத்திற்கு உணவருந்தச் சென்றார். அந்த சமயத்தில் கடைக்குள் நைசாக நுழைந்த இளைஞர் கல்லா பெட்டியிலிருந்த பணத்தை திருடினார். இவை அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதன் அடிப்படையில் திருடனை போலீசார் தேடுகின்றனர்.

நன்றி: பாலிமர் நியூஸ்

தொடர்புடைய செய்தி