புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை பூச்செரிதல் விழாவினை முன்னிட்டு அன்னவாசல் பகுதியில் மாபெரும் ஜல்லிக்கட்டு விழா இன்று நடைபெற்றது. இதனை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சி முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், திமுக உறுப்பினர் முகமது நிஷார் கலந்து கொண்டனர். இதில் 700 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.