சென்னை: எண்ணூர் அருகே ஈரக் கையுடன் சார்ஜ் போட்ட பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 9ஆம் வகுப்பு படித்து வந்த அனிதா என்ற மாணவி, ஈரக் கையால் செல்போனுக்கு சார்ஜ் போட்டுள்ளார். அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்து துடிதுடித்து விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள், அனிதா ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.