விராலிமலை: தொண்டை மான்நலூர் ஊராட்சி
சேப்பிளாந்தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் சிவக் குமார் (55), வீட்டின் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்தை பராமரிக்கும் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு திருச்சி புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது, திருச்சி கல்லுக்குழியை சேர்ந்த ஜெயசீலன்(32) என்பவர் ஓட்டி வந்த பைக் எதிர்பா ராதவிதமாக மோதியது. இதில் படுகாயமடைந்த சிவக்குமாரை அப்பகுதி மக்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிவக்குமார் உயிரிழந்தார். விபத்து குறித்து மாத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.