புதுக்கோட்டை - Pudukkottai

புதுக்கோட்டை மாநகராட்சி கோலாகல கொண்டாட்டம்!

புதுக்கோட்டை மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டதை அடுத்து புதுக்கோட்டை மாநகராட்சி மேயராக திலகவதி செந்தில் மற்றும் துணை மேயர் யாகத்அலி பதவி ஏற்றுக்கொண்டனர். புதுக்கோட்டை மாநகராட்சி அலுவலகத்தில் விழா கோலமாக கொண்டாடப்படுகின்றன மேளதாளத்துடன் வான வேடிக்கைகள் விடப்பட்டு மாநகராட்சி இந்தியா கூட்டணி கட்சியின் உறுப்பினர்களும் கலந்து கொண்டு. புதுகை மாநகராட்சி விழா தொடங்கியது. 120 ஆண்டுகால கொள்கை நகராட்சி மாநகராட்சியாக இன்று மாற்றப்பட்டது. இதில் அமைச்சர்கள் கே எம் நேரு, ரகுபதி, ஆட்சியர் அருணா திமுக கழக செயலாளர் கே செல்லபாண்டியன், புதுக்கோட்டை எம்எல்ஏ முத்துராஜா, மேயர் திலகவதி செந்தில், துணை மேயர் லியாகத் அலி, மாமன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் தூய்மை பணியாளர்கள் என ஏராளமான கலந்து கொண்டுள்ளனர். புதுக்கோட்டை நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில், உள்ளாட்சி துறை அமைச்சர் கே என் நேரு புதுக்கோட்டை மாநகராட்சி திலகவதி செந்திலுக்கு செங்கோல் கொடுத்து கௌரவித்தார். மாவட்ட ஆட்சியர் அருணா 51 பவுன் எடையுள்ள தங்க சாரட் (மேயர் பட்டை) மேயருக்கு கழுத்தில் அணிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டை எம்எல்ஏ முத்துராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.

வீடியோஸ்


புதுக்கோட்டை