மின்சார வாரியத்துக்கு சொந்தமான ஈபி போஸ்டில் தீ விபத்து!

84பார்த்தது
புதுக்கோட்டை நகரப் பகுதியான கீழ மூன்றாம் வீதியில் அதிகாலை 3 மணி அளவில் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு சொந்தமான ஈபி போஸ்டில் திடீர் தீ விபத்து! வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கும் பாக்ஸ் வெடித்து சிதறியது இதனால் 4 மணி நேரம் மின்சாரம் துண்டிப்பு. புதுக்கோட்டை கீழ மூன்றாம் வீதியில் ஈபி போஸ்ட் உள்ள பாக்ஸ் தீப்பற்றி எரியத் தொடங்கியது. அப்பொழுது வீடுகளில் உள்ள மின் விளக்குகள் விட்டுவிட்டு எரிந்து இருக்கிறது. தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு சொந்தமான ஈபி போஸ்டில் வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கும் பாக்ஸில் திடீரென தீப்பற்ற தொடங்கிய அந்த பாக்ஸ் பின்னர் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது. பொதுமக்கள் உடனடியாக தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கும் தீயணைப்பு துறைக்கும் தகவல் கொடுத்தனர் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க முடியாமல் தவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த மின்சார வாரிய ஊழியர்கள் டிரான்ஸ்பாரை ஆப் செய்து விட்டனர். இதனைஅடுத்து
தீயை கட்டுப்படுத்தினர். ஆனால் புதிதாக மேலே ஒரு இரும்பு பாக்ஸ் ஒன்று வைக்கப்பட்டு அதன் வழியே வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கப்பட்டது. அப்பகுதி பொதுமக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு இதுபோல்தான் அனைத்து இடங்களிலும் கொடுக்கப்படுகிறது கவலைப்பட வேண்டாம் என தெரிவித்தனர். கடந்த ஆறு மாதத்தில் அப்பகுதியில் பத்துக்கு மேற்பட்ட பாக்ஸ்கள் இதே போல் வெடித்து சிதறி உள்ளது.

தொடர்புடைய செய்தி