அறந்தாங்கி அருகே கீழ்க்குடிகாராவயலில் மாட்டு வண்டி பந்தயம்!

51பார்த்தது
அறந்தாங்கி அருகே கீழ்க்குடிகாராவயல் வேலடிமுருகன் கோயில் திருவிழாவை முன்னிட்டு 2வது ஆண்டாக மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. பெரியமாடு, கரிச்சான்மாடு, புதுப்பூட்டு என்று 3 பிரிவாக நடத்தப்பட்ட பந்தயத்தில் புதுகை, தஞ்சை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் இருந்து மாட்டுவண்டிகள் பங்கேற்றன.
வெற்றிப்பெற்ற மாட்டு உரிமையாளர்களுக்கு ரொக்கப்பரிசு, கோப்பை வழங்கப்பட்டது. பந்தயத்தை சாலையின் இருபுறமும் நின்று நுாற்றுக்கணக்கான பார்வையாளர்கள் பார்த்து ரசித்தனர்.

தொடர்புடைய செய்தி