ஆலங்குடி - Alangudi

பூச்சிக்கொல்லி மருந்து அருந்தி பெண் தற்கொலை

பூச்சிக்கொல்லி மருந்து அருந்தி பெண் தற்கொலை

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே பள்ளத்தி விடுதியை சேர்ந்த ரெங்கராஜ் மனைவி உமா(வயது 48). இவருக்கு நீண்ட காலமாக வயிற்று வலி இருந்தது. இதனால் விவசாயத்திற்கு பயன்படும் பூச்சிக்கொல்லி மருந்தை தின்று தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இதுகுறித்து அவரது கணவர் ரெங்கராஜ் வடகாடு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பெயரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு உமாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

வீடியோஸ்


புதுக்கோட்டை