கீரமங்கலம் எல்லைப் பகுதியில் பொதுமக்கள் குப்பைகளை கொட்டுவதால் அந்த பகுதி செல்வர்கள் மூக்கை பிடித்தபடியே செல்கின்றனர். மேலும் பலத்த காற்றடித்து குப்பைகள் சாலைகளில் விழுவதால் சாலைகள் குப்பைக் கூளங்களாக காணப்படுகின்றன. மேலும் நாய்கள், பன்றிகள் குப்பையில் உள்ளவற்றை கிளறுவதால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. ஆகவே உடனடியாக ஊராட்சி நிர்வாகம் குப்பைகளை அகற்ற அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.