ஆலங்குடி: இருசக்கர வாகனம் மோதி முதியவர் பலி

1023பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வம்பன் காலனி பாப்பான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (60). இவர் அப்பகுதியில் சாலையோரமாக நடந்து சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அந்த வழியாக வந்த மாஞ்சன்விடுதி கிராமத்தை சேர்ந்த செல்வம் மகன் ஸ்ரீராம் என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக மாரிமுத்து மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி