குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

85பார்த்தது
குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
தென்காசி மாவட்டத்தில் உள்ள பிரபல சுற்றுலா தலமான குற்றாலத்திற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த கனமழையால் குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்து போலீசார் உத்தரவிட்டனர். இந்த நிலையில், குற்றாலம் அருவிகளில் தற்போது நீர்வரத்து சீரான நிலையில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி