கைதி மரணம்: உறவினர்கள் மறியல்

61பார்த்தது
கைதி மரணம்: உறவினர்கள் மறியல்
கள்ளச்சாராயம் விற்ற வழக்கில் சிறை சென்ற நபர் திடீரென உயிரிழந்தார். திருச்சி பழூரைச் சேர்ந்த திராவிட மணி (40) என்பவரை கடந்த இரு தினங்களுக்கு முன்பு போலீசார் கைது செய்து திருச்சி சிறையில்‌ அடைத்தனர். நேற்று அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அவர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் இறந்துள்ளார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறி நேற்றிரவு உறவினர்கள் மருத்துவமனை முன்பு மறியலில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி