ஆட்டோவை அடித்து நொறுக்கிய போலீஸ் (வீடியோ)

72538பார்த்தது
உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூரில் சமீபத்தில் அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. ஆட்டோ டிரைவருக்கும், குடிபோதையில் இருந்த போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆட்டோ டிரைவரை காவலர் கடுமையாக தாக்கியுள்ளார். மேலும் ஆட்டோ ரிக்ஷா கண்ணாடியை கட்டையால் அடித்து நொறுக்கியுள்ளார். ஆட்டோ டிரைவரை தாக்கிய போலீஸ்காரர் உயர் அதிகாரிகளால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தனது ஆட்டோரிக்ஷாவை பழுது நீக்கியதற்காக இழப்பீடு பெற்றுத்தரவேண்டும் என ஆட்டோ ரிக்ஷா உரிமையாளர் கூறிவருகிறார். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி