தமிழகத்தை சேர்ந்த இளைஞர்கள் நான்கு பேர் காரில் தங்களது சொந்த வேலைக்காக கேரளாவிற்கு சென்றுள்ளனர். அப்போது கேரள எல்லையில் அவர்களது காரை நிறுத்திய போலீசார், கேரளா மோட்டார் வாகன விதிமுறைகளை மீறியதாகக்கூறி டயர் ஒன்றுக்கு ரூ.5000 என மொத்தமாக ரூ.20000 அபராதம் விதித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தங்களுக்கு முன்னாள் சென்ற கேரளா பதிவெண் கொண்ட வண்டியை மடக்கி அபராதம் விதிக்காமல் எங்களுக்கு மட்டும் அபராதம் விதிப்பது ஏன் என கேள்வியெழுப்பியுள்ளனர்.