சமீபத்தில் மும்பையில் மனநலம் பாதித்த 23 வயது பெண் ஒருவருடன், பக்கத்து வீட்டில் வசிக்கும் 24 வயது வாலிபர் ஒருவர் உறவு கொண்டார். இதனால் அந்தப் பெண் கர்ப்பமானார். இது குறித்து மும்பை செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம், “மனநலம் பாதித்த பெண்களுடன் உடலுறவு கொள்வதை பல காரணமாக கருத வேண்டும். அவர்கள் இதற்கு சம்மதித்தாலும் அது குற்றம்தான். அத்தகைய மனநலம் கொண்டவர்களால் விளைவுகளை புரிந்து கொள்ள முடியாது” என தீர்ப்பளித்துள்ளது.