இளைஞரை காலால் உதைத்து தாக்கும் போலீஸ் (வீடியோ)

48629பார்த்தது
தென்காசி மாவட்டம் பேருந்து நிலையத்தில் சமீபத்தில் இளைஞர் ஒருவரை பணியில் இருந்த காவலர் ஒருவர் காலால் உதைத்து சரமாரியாகத் தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் காவலரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மாவட்ட எஸ்.பி சுரேஷ்குமார், விசாரணைக்கு ஒத்துழைக்காமல் போலீசாரையும் அவருடைய குடும்பத்தினரையும், அவதூறாகப் பேசி தாக்க முயற்சி செய்தார் என விளக்கம் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி