பிரதமர் மோடி 3ஆவது நாளாக இன்று (ஜூன் 1) விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் மேற்கொள்ள இருக்கிறார். பிற்பகலில் தியானத்தின் நிறைவாக 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்த தனிப்படகில் செல்கிறார். அதன்பிறகு திருவனந்தபுரம் வழியாக டெல்லி திரும்புகிறார். பிரதமர் மோடி தியானம் காரணமாக சுற்றுலாப் பயணிகளுக்கு இன்று அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விவேகானந்தர் மண்டபத்தில் கடலிலும், கடற்கரையிலும், வானிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.