பயணிகளை கவரும் வகையில் சென்னை மெட்ரோ நிர்வாகம் அவ்வப்போது புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துவது வழக்கம். தற்போது மெட்ரோவில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த 'Pink Squad' என்று அழைக்கப்படும் தற்காப்பு கலைகளில் பயிற்சி பெற்ற பெண்களின் அணி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் பயணத்தின்போது பெண்களுக்கு பாதுகாப்பாக இருப்பர் என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. பெண்கள் அணி இன்று முதல் இந்த சேவையில் இணைவதாக கூறப்படுகிறது.