கோடைகால பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது, ஆட்சியர் அழைப்பு.

599பார்த்தது
கோடைகால பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது, ஆட்சியர் அழைப்பு.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கற்பகம் ஏப்ரல் - 26ம் தேதி வெளியிட்டுள்ள தகவலில்,
பெரம்பலூர் மாவட்ட விளையாட்டுப் பிரிவின் சார்பில்,
மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம் பெரம்பலூர் மாவட்டத்தில் ஏப்ரல் 29ம் தேதி முதல் மே. 13ம் தேதி வரை டேக்வாண்டோ, கைப்பந்து, தடகளம், இறகுபந்து மற்றும் மேசைப்பந்து ஆகிய விளையாட்டுகளுக்கு நடைபெற உள்ளது.
இப்பயிற்சி முகாமில் பள்ளி, கல்லூரியில் பயிலும் மாணவர் மற்றும் மாணவரல்லாத 18 வயதிற்கு கீழ் உள்ள இளைஞர்கள் கலந்துகொள்ளலாம். ஆதார் கார்டு நகல் கண்டிப்பாக சமர்பித்தல் வேண்டும். பயிற்சி முகாமில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் பங்குபெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி முகாமில் கலந்துகொள்ளும் ஒவ்வொரு நபரும் இணையதளம், மூலம் மட்டுமே சந்தா தொகை ரூ. 200 செலுத்த வேண்டும்.
பயிற்சி முகாமில் கலந்து கொள்பவர்கள் காலை 6. 00 மணி முதல் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் பெயர்களை. பதிவுசெய்து கொள்ளலாம். பயிற்சி முகாமில் கலந்து கொள்பவர்கள் மாவட்ட விளையாட்டு அலுவலரது தொலைபேசி எண். 7401703516 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
எனவே பெரம்பலூர் மாவட்டதிலுள்ள விளையாட்டில் ஆர்வமுள்ள வீரர், வீராங்கனைகள் அதிக அளவில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி