நினைவஞ்சலி செலுத்திய எம் பி அருள் நேரு

52பார்த்தது
நினைவஞ்சலி செலுத்திய எம் பி அருள் நேரு
பெரம்பலூர் மாவட்ட கழக முன்னாள் செயலாளர் - மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் எஸ்.சிவசுப்ரமணியன் அவர்களின் 5 - ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, பெரம்பலூர் பாலக்கரையில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில் அவரது உருவப்படத்திற்கு, மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் முன்னிலையில், கே.என்.அருண்நேரு எம்.பி.மலரஞ்சலி செலுத்தினார். இதில் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் குன்னம் சி.இராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என். ராஜேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர், நூருல்ஹிதா இஸ்மாயில்,சன்.சம்பத், மாவட்ட பொருளாளர் செ.ரவிச்சந்திரன், பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் எம்.ராஜ்குமார்,வேப்பந்தட்டை ஒன்றிய பெருந்தலைவர் க.ராமலிங்கம் மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி