1.7 லட்சம் பேர் வெள்ளத்தில் தவிப்பு

84பார்த்தது
1.7 லட்சம் பேர் வெள்ளத்தில் தவிப்பு
அசாமில் மழை தற்போது குறைந்துள்ளதால், முக்கிய ஆறுகளில் நீர்வரத்து குறைந்து வெள்ளம் சீரடைந்தது. ஆனால் இன்னும் 1,70,377 பேர் வெள்ளத்தில் ஏற்பட்ட பாதிப்பால் தவிக்கின்றனர். பஜாலி, பர்பேட்டா, கச்சார், தரங், கோல்பாரா, கம்ரூப், கரீம்நகர், நாகோன் மற்றும் ஹோஜாய் ஆகிய மாவட்டங்களில் இதன் தாக்கம் அதிகம் காணப்படுவதாக அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (ஏஎஸ்டிஎம்ஏ) தெரிவித்துள்ளது. அசாமில் இந்த ஆண்டு வெள்ளம் காரணமாக 40 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி