தெரு நாய்கள் கடித்துக் குதறியதில் 2 வயது சிறுமி உயிரிழப்பு

66பார்த்தது
தெரு நாய்கள் கடித்துக் குதறியதில் 2 வயது சிறுமி உயிரிழப்பு
மத்திய பிரதேச மாநிலம் கர்கோன் மாவட்டத்தை சேர்ந்தவர் சஞ்சய் என்பவரின் மகளான 2 வயது சிறுமி, வீட்டிற்கு வெளியே நேற்று இரவு விளையாடிக்கொண்டிருந்தாள். அப்போது சாலையில் சுற்றித்திரிந்த தெரு நாய்கள், திடீரென சிறுமியை கொடூரமாக கடிக்கத் தொடங்கின. அப்போது அங்கு யாரும் இல்லாததால் இந்த சம்பவத்தை தடுக்க முடியவில்லை. பின்னர் 150 மீட்டர் கடித்து இழுத்து சென்றதையடுத்து சஞ்சய் வந்து குழந்தையை மீட்டுள்ளார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி