திண்டுக்கல்: பழனி முருகன் கோயிலில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் மாசி திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மாசி திருவிழா தேரோட்டம் நாளை (மார்ச் 12) மாலை 4:30 மணிக்கு நடைபெற உள்ளது. பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் தீச்சட்டி எடுத்தும், பால்குடம் எடுத்தும் கோயிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். கோயில் வளாகத்தில் மாரியம்மன்க்கு உருவசிலை அமைத்து அலங்காரம் செய்து பக்தர்கள் வழிபாடு செய்தனர். தேரோட்டத்திற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.