நடிகர் சூர்யாவின் 44-வது படமான 'ரெட்ரோ' படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். இப்படம் வருகிற மே 1-ந் தேதி தொழிலாளர் தினத்தில் வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள, நடிகை பூஜா ஹெக்டே ரெட்ரோ படத்தில் புதிய முயற்சியாக தனது சொந்தக் குரலில் தமிழில் டப்பிங் பணியை மேற்கொண்டு வருவதாக படக்குழு அறிவித்துள்ளது.எங்களின் சவாலை பூஜா ஹெக்டே ஏற்றுக்கொண்டதாகவும் அவரின் அர்ப்பணிப்பும் உழைப்பும் பலனித்ததாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.