மக்களவையில் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் அவதூறு பேச்சுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது X தள பக்கத்தில், தரம் தாழ்ந்து "நம் பள்ளிக் குழந்தைகளின் கல்விக்கு ஒன்றிய அரசு நியாயமாக தர வேண்டிய நிதியை உடனடியாக விடுவிடுக்க வேண்டும். தமிழ்நாட்டின் மொழியோடும் கல்வியோடும் உரிமையோடும் விளையாடுவது நீறு பூத்த நெருப்பை விசிறி விடுவதற்கு சமம். இதை கண்டிக்கிறோம், எச்சரிக்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.