குஜராத் மாநிலத்தின் அம்ரேலி மாவட்டம் அருகே ஒரு கோதுமை குடோன் இயங்கி வருகிறது. அங்குள்ள ஊழியர்கள் கடந்த 7ஆம் தேதி குடோனில் உள்ள கோதுமை மூட்டைகளை அடுக்கி வந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக அந்த குடோனில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த கோதுமை மூட்டைகளை சரிந்து கீழே நின்றிருந்த ஐந்து பேர் மீது விழுந்தன. இதில் ஒருவர் உயிரிழந் நிலையில், 4 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து அதிர்ச்சி சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.