நூதன முறையில் வடையுடன் மாதிரி நகர மன்ற கூட்டத்தை நடத்தினர்

85பார்த்தது
உதகையில் அதிமுகவைச் சேர்ந்த நகர மன்ற உறுப்பினர்களின் வார்டுகளில் கடந்த மூன்று வருடங்களாக எவ்வித அடிப்படை வசதிகளும் நகராட்சி நிர்வாகம் செய்து தரவில்லை எனவும் அதற்கு உண்டான ஒப்பந்தங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில்லை என நகர மன்ற கூட்டத்தை புறக்கணித்து உதகை நகராட்சி அலுவலகம் முன்பு அதிமுகவைச் சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் நூதன முறையில் வடையுடன் மாதிரி நகர மன்ற கூட்டத்தை நடத்தினர்.

நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் வெற்றி பெற்ற நகர மன்ற உறுப்பினர்களுக்கான மாதாந்திர கூட்டம் உதகை நகராட்சி அலுவலகத்தில் நகர மன்ற தலைவர் வாணீஸ்வரி தலைமையில் நடைப் பெற்றது. இதில் உதகை நகராட்சி ஆணையாளர் ஜகாங்கீர் பாஷா மற்றும் திமுக, காங்கிரஸ் மற்றும் அதிமுகவை சேர்ந்த வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி