பூண்டு விவசாயிகள் மகிழ்ச்சி

63பார்த்தது
நீலகிரி மாவட்டத்தில் தேயிலை சாகுபடிக்கு அடுத்தபடியாக மலைக்காய்கறிகள் விவசாயம் பிரதானமாக உள்ளது. கேரட், பீட்ரூட், உருளை கிழங்கு, முட்டைகோஸ், காலிபிளவர், முள்ளங்கி, நூல்கோல், பீன்ஸ், பூண்டு உள்ளிட்ட மலை காய்கறிகள் மற்றும் ஏற்றுமதி தரம் வாய்ந்த இங்கிலீஷ் காய்கறிகளை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர் நீலகிரியில் விளையும் வெள்ளை பூண்டு அதிக காரத்தன்மை கொண்டதாகவும், மருத்துவ குணம் உடையதாக உள்ளது. பூண்டுக்கு எப்போதும் உள்ளூர் மட்டுமின்றி, வெளி மாநிலங்களிலும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. மாவட்டத்தின் ஊட்டி சுற்று வட்டார பகுதிகளான எம். பாலாடா, கொல்லிமலை கேத்தி மற்றும் கோத்தகிரி சுற்று வட்டார பகுதிகளான கட்டபெட்டு, பனஹட்டி, பில்லிக்கம்பை, கக்குச்சி, உள்ளிட்ட பகுதிகளிலும் பூண்டு அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது. தொடர் மழை பொய்த்ததால் குறைந்தளவிலான வெள்ளை பூண்டு பயிரிடப்பட்டது. தற்போது, அறுவடைக்கு தயாரான வெள்ளை பூண்டுகளை விவசாய நிலங்களில் தரம் பிரித்து சந்தைக்கு அனுப்பும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளது. விவசாயிகள் விளைந்த வெள்ளை பூண்டை அறுவடை செய்து, வாகனங்கள் மூலம் ஊட்டி மற்றும் மேட்டுப்பாளையம் காய்கறி மாண்டிகளுக்கு விற்பனைக்காக கொண்டு செல்கின்றனர். தற்போது வரைஉதகை மார்க்கெட்டில் ஊட்டி பூண்டு கிலோ, 280 ரூபாய், பிற மாநில பூண்டு கிலே, 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதினால் விவசாயிகள் மகிழ்ச்சி.

தொடர்புடைய செய்தி