குன்னுாரில் குடிநீர் தட்டுப்பாடு

50பார்த்தது
குன்னுாரில் குடிநீர் தட்டுப்பாடு
குன்னுார் நகராட்சிக்கு உட்பட்ட, 30 வார்டுகளுக்கு, ரேலியா அணையில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர், கிரேஸ் ஹில் நிலைய தொட்டிகளில், சுத்திகரிப்பு செய்து, மக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில் தற்போது இந்நிலையில், 43. 6 அடி உயரம் கொண்ட ரேலியா அணையில் தண்ணீர், 16 அடி அளவிற்கு மட்டுமே இருப்பு உள்ளது. இந்த நீரும் சேறும் சகதியும் நிரம்பி உள்ள தால், 6 அடி தண்ணீர் மட்டுமே பயன்படுத்த முடியும். தற்போதே பாலைவனம் போன்று மாறி அணை வறண்டு வருவதால் மே மாதம் அக்னி துவங்கினால் குடிநீர் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும்.

தொடர்புடைய செய்தி