ரயில் முன் பாய்ந்த இளைஞர்: லோகோ பைலட் செய்த செயல்

79பார்த்தது
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் இன்று(ஏப்ரல் 24) அதிர்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. வேலையில்லாத் திண்டாட்டத்தில் இருந்த இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொள்ள நினைத்து ஜான்சி-எட்டாவா எக்ஸ்பிரஸ் முன் பாய்ந்தார். ஆனால் அந்த இளைஞரை கவனித்த லோகோ பைலட் அவசரகால பிரேக் போட்டு அவரது உயிரைக் காப்பாற்றினார். ஆனால், ரயிலின் என்ஜின் இடையே சிக்கிக் கொண்ட அந்த நபர் படுகாயமடைந்தார். இதனால், அவரது இரண்டு கால் விரல்களும் துண்டிக்கப்பட்டன. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி