முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன்

72பார்த்தது
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன்
கரூரில் நடைபெற்ற குடிமராமத்து பணிகளை தடுத்ததாகவும் அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இதனைத் தொடர்ந்துஎம்.ஆர். விஜயபாஸ்கர் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் விஜயபாஸ்கருக்கு,உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும் விசாரணைக்கு தேவைபடும் போது நேரில் ஆஜராக வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.

தொடர்புடைய செய்தி