டெல்லி துவாரகா பகுதியில் ஏப்ரல் 22ம் தேதி ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடந்தது. ஜாபர்பூர் கலான் காவல் நிலையப் பகுதியில் இரு இளைஞர்கள் பைக்கில் வேகமாகச் சென்றனர். அப்போது, டெல்லி போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான பஸ் ஒன்று அவர்கள் முன் வந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த பைக் பஸ் மீது மோதி விட்டு சென்றது. பைக்கில் சென்ற இருவரும் சாலையில் விழுந்தனர். பலத்த காயம் அடைந்த அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.