உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

57பார்த்தது
ஓணம் மற்றும் மிலாடி நபி வார விடுமுறை என தொடர் விடுமுறை காரணமாக உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்.

மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை காண அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திர இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மற்றும் சமவெளி பிரதேசங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர்.

இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் உதகையில் உள்ள உலகப் புகழ்பெற்ற அரசு தாவரவியல் பூங்கா, கோடநாடு காட்சி முனை, ரோஜா பூங்கா, பைன் ஃபாரஸ்ட், பைக்காரா நீர் வீழ்ச்சி , படகு இல்லம், யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற சிறப்பு மலை இரயில் பயனம் செய்தும் பல்வேறு சுற்றுலா தளங்களை கண்டு ரசித்து செல்கின்றனர்.

இந்நிலையில் ஓணம் மற்றும் மிலாடி நபி வார விடுமுறை என தொடர் விடுமுறை காரணமாக உதகையில் உள்ள சுற்றுலா தலங்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர்.

மேலும் உதகையில் நிலவும் இதமான கால நிலையை அனுபவித்தவாறு புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்து வருகின்றன.

மேலும் சுற்றுலா தளங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் கலை கட்டியது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி