நீலகிரியில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

1884பார்த்தது
நீலகிரியில்  டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு
மே மாதம் 1-ந் தேதி தொழிலாளர் தினத்தன்று, நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் எப். எல். 1 மதுபான சில்லறை விற்பனை கடைகள், எப். எல். 2 கிளப் பார்கள், எப். எல். 3 ஓட்டல் பார்கள் மற்றும் எட். எஸ். 3 ஏ ஆகியவற்றில் எந்தவித மதுபானங்களும் விற்பனை செய்யப்படமாட்டாது.

அந்த நாளில் கட்டாயமாக டாஸ்மாக் சில்லரை விற்பனை கடைகள், கிளப்கள், ஓட்டல் பார்கள், தமிழ்நாடு ஒட்டல்களில் உள்ள பார்கள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கும். இந்த உத்தரவை மீறி எவரேனும் மதுபானங்களை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் சம்மந்தப்பட்ட மது விற்பனை உரிமைதாரர்கள் மற்றும் பணியாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ப்படும்.

மே 1-ந் தேதி நீலகிரியில் டாஸ்மாக் சில்லரை விற்பனை கடைகள், கிளப்கள், ஓட்டல்பார்கள், தமிழ்நாடு ஓட்டல்களில் உள்ள பார்கள் ஏதேனும் திறந்திருப்பதாக பொதுமக்களுக்கு தகவல் தெரியும் பட்சத்தில் குன்னூர் எடப்பள்ளியில் உள்ள மாவட்ட டாஸ்மாக் மேலாளரிடம் புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்தி